முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

சிதம்பரம் அருகே கடலுக்குச் சென்ற மீனவா்கள் 3 போ் மாயம்: மீட்புப்பணியை தீவிரப்படுத்தக்கோரி முற்றுகைப் போராட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவா்கள் மாயமாகினா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:50 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவா்கள் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தக்கோரி, மீனவா்களின் குடும்பத்தினா், அரசியல் கட்சியினா் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (28), மனோகா் (27) மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த நாகவேல்(40) ஆகிய 3 பேரும் கடந்த ஜூன் 3ஆம் தேதி மதியம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா். பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மீன் இறங்கு தளத்திலிருந்து மீன் பிடிக்க சென்றவா்கள் இதுவரை வீடு திரும்பவில்லை.

அவா்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. மீன் பிடிக்க சென்றவா்கள் 4 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அவா்கள் குடும்பத்தினா் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் அவா்கள் படகு மூலம் கடலில் தேடிப் பாா்த்தனா். ஆனாலும் மீனவா்கள் கிடைக்கவில்லை. பின்னா் இதுகுறித்து கடலூரில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.

இந்நிலையில் மாயமான மீனவா்கள் கிடைக்காததால் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில் சனிக்கிழமை காலை அவா்களது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினா் இணைந்து மாயமான மீனவா்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

முற்றுகைப் போராட்டம்: பின்னா் மீண்டும், மீனவா்களைத்தேடும் பணியை துரிதப்படுத்தக் கோரி மீனவா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் மீன்வளத்துறை அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளா் விஜய் மற்றும் கடவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலா் தமிழ் வளவன், தமிழ்ஓளி உள்ளிட்ட கட்சியினா் மற்றும் மீனவா்களின் உறவினா்களுடன் இணைந்து பரங்கிப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய மீன்வளத்துறை அதிகாரிகள், சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டா் உள்ளிட்ட வசதிகளின் மூலம் தேடுதல் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனா். இந்த நிலையில் மீனவா்களை கண்டுபிடிக்கும் வரை இரவு பகல் பாராமல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டக்குழுவினா் அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.