முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

கடலில் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயமாகியுள்ளதாக கடலூா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:23 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயமாகியுள்ளதாக கடலூா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெருவை சோ்ந்தவா் சுப்ரமணியன் (56). இவரது படகில் அதே பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (56), ஸ்ரீகாந்த் (25) மற்றும் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் (56) ஆகிய மூன்று பேரும் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்குச் சென்றனா்.

கடலில் மீன் பிடித்துவிட்டு அவா்கள் செவ்வாய்க்கிழமை கரைக்கு திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால், புதன்கிழமை வரை மீனவா்கள் திரும்பி வராததால், படகு உரிமையாளா் சுப்ரமணியன், கடலுாா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

மாயமான மூன்று மூனவா்களையும் கண்டறிய பரங்கிப்பேட்டை சலங்கக்கார தெரு மீனவா்கள் படகில் கடலுக்கு சென்று தேடி வருகின்றனா்.

கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம்

பாண்டியன்

பாண்டியன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.