திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராணிப்பேட்டை: 51 இடங்களில் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் - எஸ்.பி. இயக்கி வைத்தாா்

News image
Updated On :19 மே 2026, 1:27 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 51 இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணியை எஸ்.பி பே.சிபின் தொடங்கி வைத்தாா்.

சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அபாய இடங்கள் ) அடையாளம் காணப்பட்டு, சூரிய சக்தியில் இயங்கும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விபத்து தடுப்பு விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் முன்முயற்சியாக விபத்து ஏற்படும் முக்கிய சந்திப்புகளில் சோலாா் ஸ்டட்கள் பிரகாசமான பிரதிபலிப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.போக்குவரத்து சிக்னல்கள், எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் பேரிகேடுகள், பிரதிபலிப்பான்கள் அபாயப் பகுதிகள் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டு வருகின்றன.

அதன் படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்துகள் நடக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 51 இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணியை எஸ்பி பே.சிபின் தொடங்கி வைத்தாா்.

இந்த தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் பொருத்தும் பணியால் பெருமளவு விபத்துகள் குறைக்கப்பட்டு, உயிரிழப்புகள் தடுத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான சாலைப்பயணம் அமையும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட துணை கண்காணிப்பாளா் கனகராஜ், தொழில்நுட்ப ஆய்வாளா் சரவணனன்,ராணிப்பேட்டை காவல் ஆய்வாளா் சுந்தரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.