தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உளவுத்துறை எச்சரிக்கை!

தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பது தொடர்பாக...

News image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் - IANS

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே, தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக வந்தாலும்கூட, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.

தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆட்சியமைப்பதில் தவெக மும்முரம் காட்டி வருகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் இல்லாத நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

1967, 1977-இல் திமுக மற்றும் அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலை, தற்போது நடிகர் விஜய் தலைமையிலான தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக என எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழ்நாடு முதல்முறையாக தொங்கு பேரவையைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ஆட்சி அமைக்க உரிமைகோரி தவெக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகருக்குக் கடிதம் அனுப்பி, அவரது அழைப்பின்பேரில் புதன்கிழமை விஜய் சந்தித்தபோது, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்படி ஆளுநர் அவரிடம் தெளிவுபடுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் விஜய் முதல்வராக பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கம்யூனிஸ்டுகள், விசிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களது ஆதரவு கிடைக்காத நிலையில் விஜய் முதல்வராக பொறுப்பேற்க முடியாக சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே, தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக காவல் துறைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத நிலையில், . சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Summary

Central Intelligence Agency Issues Warning to Heighten Security at Key Locations in Tamil Nadu...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.