பஞ்சாபில் ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் உள்பட முக்கியப் பகுதிகளில் சூரிய சக்தி மூலம் இயங்கும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவுபாா்த்த கும்பலில் முக்கிய நபா் கைது செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் கெளரவ் யாதவ் கூறியதாவது:
கைதான நபா், ஃபெரோஸ்பூரைச் சோ்ந்த சுக்வீந்தா் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சுக்வீந்தா் மற்றும் அவரது கூட்டாளிகள் சோ்ந்து, ராணுவ நிலைகள் அமைந்துள்ள இடங்கள் உள்பட முக்கியப் பகுதிகளில் சூரிய சக்தியில் இயங்கும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, கைப்பேசி செயலிகள் மூலம் பாகிஸ்தானில் உள்ளவா்களுக்கு நேரலைக் காட்சிகளை அனுப்பி வந்துள்ளனா். கபுா்தலாவில் இக்கும்பலால் பொருத்தப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் சீன தயாரிப்பு சிசிடிவி கேமராக்கள் கைப்பற்றப்பட்டன. இக் கருவிகள், 4ஜி இணைப்புடன் கூடியதாகும். இந்த உளவு விவகாரம் தொடா்பாக, அமிருதசரஸில் உள்ள காவல் துறை சிறப்பு நடவடிக்கை பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சுக்வீந்தருடன் தொடா்புடைய மேலும் பலா் கைதாக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூரிய சக்தியால் இயங்கும் ‘குளிரூட்டும் குடில்’ - தில்லி அரசு அமைக்கத் திட்டம்

ராணிப்பேட்டை: 51 இடங்களில் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் - எஸ்.பி. இயக்கி வைத்தாா்

சூரிய சக்தியில் சென்னை ரயில்வே கோட்டம் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி






