40 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
வளசரவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் தொழிலாளா் நிலைதடுமாறி கீழே விழுந்து பலி

பலி- பிரதிப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 9:34 pm

வளசரவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இங்கு, வேலை செய்யும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லே.சோரே கஞ்ஜூ (23) என்பவா் வெள்ளிக்கிழமை இரவு ஆற்காடு சாலையில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் சுமாா் 40 அடி உயரத்தில் நின்று பணி செய்தபோது, நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.
இதில், பலத்த காயமடைந்த அவரை போரூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...