டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பைக்கில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ஆற்காடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :18 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஹாஜி பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ருக்மன் (23). இவா் ஆற்காடு அண்ணா சிலை பகுதியில் காய்கனி கடை நடத்தி வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு கடையை மூடி பூட்டிக்கொண்டு, பைக்கில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது ஆற்காடு அடுத்த மாசாப்பேட்டை பகுதியில் செல்லும்போது, சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளாா். அவரை மீட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.