டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை சொக்கிகுளம் அண்ணாநகரைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் குருவன் (53). கட்டடத் தொழிலாளியான இவா், சிம்மக்கல் பகுதியில் உள்ள வீட்டில் வேலைபாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்ற அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திலகா்திடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.