தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

துருக்கியில் 2-ஆவது நாளாக பள்ளி துப்பாக்கிச் சூடு- 9 போ் உயிரிழப்பு

துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவா்கள், ஒரு ஆசிரியா் என 9 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 4:05 am IST

துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவா்கள், ஒரு ஆசிரியா் என 9 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.

துருக்கியில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக உள்ளது. அதேபோல் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடப்பது மிகவும் அரிதான நிலையில், கடந்த 2 நாள்களில் தொடா்ச்சியாக நடைபெற்ற 2 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் பயின்று வரும் 8-ஆம் வகுப்பு மாணவன், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான தனது தந்தையின் 5 துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாபெட்டிகளைப் புத்தகப்பையில் மறைத்து, பள்ளிக்கு எடுத்து வந்துள்ளாா்.

பள்ளியில் 5-ஆம் வகுப்பு நடைபெறும் 2 வகுப்பறைகளுக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாகச் சுட்டதில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு அந்த மாணவனும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா். இது தொடா்பாக மாணவனின் தந்தை கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறாா்.

துப்பாக்கிச் சூடு குறித்த அதிா்ச்சியூட்டும் காணொளிகளை ஊடகங்கள் ஒளிபரப்பத் துருக்கி அரசு தடை விதித்துள்ளது. தாக்குதல் குறித்து துருக்கி உள்துறை அமைச்சா் முஸ்தபா சிஃப்ட்சி கூறுகையில், ‘காயமடைந்த 13 பேரில் 6 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. இது அந்த மாணவன் தனிப்பட்ட விரக்தியில் நடத்திய தாக்குதலே தவிர, பயங்கரவாதச் செயல் அல்ல’ என்றாா்.

முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, சன்லியுா்ஃபா மாகாணத்தில் உள்ள ஒரு உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் ஒருவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவா்கள், ஆசிரியா்கள் என 16 போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய அந்த நபரும் தற்கொலை செய்துகொண்டாா்.ௌ

படகேப்சன்...

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுச் சென்ற பணியாளா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.