மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் ஆயுதமேந்திய கும்பல்கள் நடத்திய 2 தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 6 போலீஸாா் உள்பட 25 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
வடக்கு ஹோண்டுராஸின் துருஜிலோ நகராட்சியில் உள்ள ஒரு வேளாண் தோட்டத்தல் நிகழ்ந்த முதல் தாக்குதலில், அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் 19 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதேபோல், கௌதமாலா எல்லைக்கு அருகில் உள்ள ஓமோவா நகராட்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் மீது மற்றொரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் ஓா் உயரதிகாரி உள்பட 6 போலீஸாா் உயிரிழந்தனா்.
இந்த அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடா்ந்து, இரு பகுதிகளிலும் ராணுவம், போலீஸாா் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








