கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விடாது துரத்தும் கரோனா...ஒமைக்ரானை விட வேகமாக பரவும் புதிய வகை கண்டுபிடிப்பு

ஒமைக்ரான் திரிபுகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றின் பிறழ்வுதான் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எக்ஸ்இ வகை கரோனாவாகும்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:52 am

DIN

பிரிட்டனில் புதிய வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள  எக்ஸ்இ வகை கரோனா ஒமைக்ரானை விட வேகமாக பரவலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் திரிபுகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றின் பிறழ்வுதான் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எக்ஸ்இ வகை கரோனாவாகும். ஒரே நேரத்தில் குறிப்பிட்ட நபர் பல்வேறு கரோனா திரிபுகளால் பாதிக்கப்படும்போது புதிய வகை உருவாகிறது. திரிபுகள் சேர்க்கையின்போது மரபியல் சார்ந்த கூறுகள் கலந்து புதிய வகை கரோனா உருவாவதாக பிரிட்டன் நிபுணர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர். 

இதுகுறித்து விரிவாக தகவல் வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, "ஒமைக்ரான் வகையின் துணை திரிபான பிஏ.2வை விட புதிதாக உருவாகியுள்ள எக்ஸ்இ கரோனா 10 சதவிகிதம் அதி வேகமாக பரவலாம்.

பிஏ.2வை விட புதிதாக உருவாகியுள்ள எக்ஸ்இ கரோனாவின் வளர்ச்சி விகிதம் 10 சதவிகிதம் அதிகம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 19ஆம் தேதி, எக்ஸ்இ வகை கரோனா முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை, 637 பேர் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு மத்தியில், ஒமைக்ரானின் பிஏ.2 துணை திரிபு உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. மார்ச் 26ஆம் தேதி வரை, பிரிட்டனில் 49 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.