/

மியான்மர் மரகதப் பச்சைக்கல் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50 தொழிலாளர்கள் பலி

யங்கோன்: மியான்மர் மரகதப் பச்சை சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

News image

மியான்மர் மரகதப் பச்சைக்கல் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50 தொழிலாளர்கள் பலி

Updated On :2 ஜூலை 2020, 6:27 am


யங்கோன்: மியான்மர் மரகதப் பச்சை சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மியான்மரின் கச்சின் மாநிலத்தில் ஹபாகந்த் நகர்பகுதியில் அமைந்துள்ளது மரகதப்பச்சைக்கல் வெட்டி எடுக்கப்படும் சுரங்கத்தில் இன்று காலை நிலச்சரிவு நேரிட்டதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

மழைக் காரணமாக சுரங்கப் பகுதி முழுவதும் நீர் தேங்கியிருந்த நிலையில், மரகதப்பச்சை கல் சுரங்கத்தில் காலை 8 மணியளவில் மணல் சரிந்து விழுந்தது. ஈரமான நிலப்பரப்பு சுரங்கப் பகுதிக்குள் விழுந்ததால், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 50 தொழிலாளர்கள் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.