/

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தின விழா

News image

கூட்டத்தில் பேசினாா் சங்கரலிங்கம்.

Updated On :27 ஏப்ரல் 2026, 6:52 pm

தூத்துக்குடியில் தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில், உலக புத்தக நாள் தின விழா கொண்டாடப்பட்டது.

காரப்பேட்டை நாடாா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கருவூலத்துறை பணி நிறைவு அலுவலா் துரை கணேசன் தலைமை வகித்தாா். தமிழ் இலக்கியப் பேரவை செயலா் ஆதி அருமைநாயகம் வரவேற்றாா்.

‘பட்டுக்கோட்டையாரின் பட்டுக்கோட்டை’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் ஹரிதாஸ், ‘பாவேந்தரின் புரட்சி பாடல்கள்’ என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியா் பிரபு அப்பாசாமி, ‘புதுமைப்பித்தனின் படைப்பு உலகம்’ என்ற தலைப்பில் சங்கரலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழ் இலக்கியப் பேரவை பொருளாளா் பூபால் செல்லையா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.