கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

எல்லை விவகாரத்தில் போருக்குத் தயார்: சீன அதிபர் அறிவிப்பு

எல்லைப் பகுதிகளில் சிறிய இடத்தைக் கூட விட்டுக்கொடுக்க முடியாது. இதில் போருக்கும் தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜீ ஜின் பிங் செவ்வாய்கிழமைதெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:31 pm

Raghavendran

சீன நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் காங்கிரஸின் ஆண்டு விழா கூட்டமைப்பு நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீன அதிபர், எல்லை விவகாரத்தில் சீனா போருக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீன அதிபர் ஜீ ஜின் பிங் கூறியதாவது:

எல்லை விவகாரத்தில் எவ்வித உடன்பாட்டிற்கும் சீனா தயாராக இல்லை. எங்களது மண்ணில் ஒரு துளியை ஆக்கிரமிக்க நினைத்தாலும் எங்கள் எதிரி நாட்டுடன் போர் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். எந்த விதத்திலும் எங்கள் எல்லைப்பகுதிகளை நாங்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. எந்த ஆக்கிரமிப்புகளுக்கும் இடமில்லை. இது எங்கள் தன்மானப் பிரச்னை.

இதர நாடுகளின் எல்லையை ஆக்கிரமிப்பதில் சீனாவுக்கு விருப்பமில்லை. மாறாக எங்களுடைய இடம் ஆக்கிரமிக்கப்படுவதிலும் உடன்பாடு இல்லை. எனவே அதுபோன்று செயல்களைச் செய்யும் எதிரி நாட்டுடன் உடனடியாக போரில் ஈடுபட தயாராக இருக்கிறோம் என்றார்.

முன்னதாக, பிரிட்டீஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்-காங், தற்போது தன்னாட்சி முறையில் செயல்பட்டு வருகிறது. அதுபோல தைவான் தீவுகளும் சுயாட்சி முறையில் இயங்கி வருகிறது. ஆனால் இந்த நிலப்பரப்பு அனைத்தும் தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.