கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

புது டிரெண்ட்;  செல்பிக்கு பரிசு!

முதல் தலைமுறை வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அனைவரும் கட்டாயம் வாக்கு அளிக்க வேண்டும் என இந்தியா முழுவதும் பல்வேறு வகையில்

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:51 am

வனராஜன்

முதல் தலைமுறை வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அனைவரும் கட்டாயம் வாக்கு அளிக்க வேண்டும் என இந்தியா முழுவதும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதிலிருந்து ஒரு படி மேலாக புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது மிசோரம் மாநில தேர்தல் ஆணையம். 

ஓட்டுப்போட்ட கையுடன் வாக்குசாவடிக்கு வெளியே வந்து ஒரு செல்பி எடுத்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படத்திற்கு 7000 பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது. இந்தத் தொகுதியில் மொத்தம் 7,84,405 வாக்காளர்கள் உள்ளனர். 

அதில் ஆண்கள் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.81 லட்சம்தான். ஆனால் 4.02 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த மக்களவை தேர்தலில் முதல் முறையாக 52,556 பேர் வாக்களித்தனர்.

1175 வாக்கு பதிவு மையங்களில் 117 மையங்களில் பெண்கள் வாக்களிக்க ஏதுவாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். முதல் முறை வாக்களிக்க இருக்கும் நபர்களின் எண்ணிகையை அதிகரிக்கவே இந்த பரிசுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செல்பி போட்டிக்கான விதிமுறைகளும் ரொம்ப சிம்பிள்தான். முதல் முறையாக வாக்களிப்பவர்கள் வாக்குச்சாவடியில் இருந்து ஒரு செல்பி, பின்னர் தாங்கள் வாக்களித்தற்கு அடையாளமாக விரலில் வைக்கப்பட்ட அடையாள மை அல்லது வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்பி எடுத்து தேர்தல் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினால் போதும். இதற்கான ட்விட்டர் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் புகைப்படத்தைப் பதிவு செய்யலாம் 

சிறந்த செல்பி எடுத்து அனுப்பியவர்களின் படங்களில் சிறந்த 3 படங்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசு வழங்கும்.  முதல் சிறந்த புகைப்படத்துக்கு ரூ.7,000, இரண்டாவது சிறந்த படத்துக்கு ரூ.5,000ம், 3வது படத்துக்கு ரூ.3,000 மும் பரிசாக வழங்குவதாக அறிவித்தது.  கடந்த வாரம் தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகைப்படங்களை ஆராய்ந்த தேர்தல்அதிகாரி குந்த்ரா முதல் பரிசை  கல்லூரி மாணவி பியாக் லியானாவுக்கும், இரண்டாவது பரிசை  ரின்லுவாவிற்கும், மூன்றாவது பரிசு தின்தாராவிற்கும் வழங்கினார். 

தொழில்நுட்பம் என்பது நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்து விட்டது என்பதற்கு உதாரணம் தான் செல்பி போட்டி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.