தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சேமியா கட்லெட்

முதலில் உருளைக்கிழங்கு, காரட் மசித்து கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்க வேண்டும்.

News image
Updated On :23 டிசம்பர் 2023, 6:30 pm

தேவையானவை:

சேமியா- 200 கிராம்
உருளைக்கிழங்கு- 3
காரட்- 3
வெங்காயம்- 4
மைதா - 50 கிராம்
ரஸ்க் தூள்- 50 கிராம்
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை- சிறிதளவு
சீரகம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

முதலில் உருளைக்கிழங்கு, காரட் மசித்து கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்க வேண்டும். சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொதி வந்ததும் இறக்கி வடிதட்டில் போட்டு வடித்து வைக்க வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சீரகம் தாளிக்க வேண்டும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்க வேண்டும். அதில், மசித்த உருளைக் கிழங்கு, காரட், வடிகட்டிய சேமியா போட வேண்டும். மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். மைதா மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாகக் கரைத்து கொள்ள வேண்டும். 

காய்கறி கலவையை உருண்டையாக உருட்ட வேண்டும்.  உருண்டையை மைதாவில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டி தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.