தமிழில் வெளியான "மீரா' படத்துக்கு ஹிந்தி உருவம் கொடுப்பதற்காக டி.சாதசிவம் அரும்பாடு பட்டார். அவருடைய முயற்சிகள் 1947-இல் பூர்த்தியடைந்தது.
ஹிந்தி "மீரா'வில் குழந்தை மீராவாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் மகள் குழந்தை ராதாவும், ராணி மீராவாக எம்.எஸ்.ஸூம் நடித்ததுடன் ஹிந்தியிலேயே வசனம் பேசிபாடினர்.
"மீரா' படம் முழுவதும் ஹிந்தியில் உருவான தகவல் அறிந்த "கவிக்குயில்' சரோஜினி நாயுடு அப்படத்தைப் பார்த்து பெரிதும் பரவசமடைந்தார்.
எம்.எஸ். சுப்புலட்சுமியை ஹிந்தி திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு படத்தின் ஆரம்பத்தில் திரையில் தோன்றி பேசுவதற்கு சம்மதித்தார்.
சினிமா உலகம் முழுவதும் அறியப்பட்ட மாபெரும் சினிமா கலைஞராக எம்.எஸ். திகழ்ந்தார். அதிலும் சரோஜினி நாயுடு படத்தின் துவக்கத்தில் வெள்ளித் திரையெங்கும் வியாபிக்க ஆங்கிலத்தில் ஆற்றிய உரை உலகத்திரை இசை ரசிகர்களை மெய்மறக்கச் செய்ததுடன் எம்.எஸ்ஸை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
சரோஜினி நாயுடுவின் உரையில்..
""தென்னகத்தின் சுப்புலட்சுமியை வட இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெருமைப்படுகிறேன். அவர், தமிழில் நடித்த "மீரா'வை ஹிந்தியில் இப்போது வழங்குகிறார். மீரா வட இந்தியாவைச் சேர்ந்தவரானாலும் உலகம் முழுவதும் போற்றி உரிமை கொண்டாடும் பக்தை.
தென்னிந்தியாவிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் எம்.எஸ்.ஸின் இனிய குரலையும் அவரது தர்ம சிந்தனையையும் அறியும். ஆனால், வட இந்திய மக்களுக்கு இவை எல்லாம் இனிமேதான் தெரிய வேண்டும்.
எம்.எஸ்.ஸை விரைவில் நீங்களும் புரிந்து கொண்டு அவரைப் பாராட்டிக் கௌரவிக்க ஆரம்பிப்பதுடன், நம் நாட்டின் ஒப்பற்ற கலை மாமணிகளில் அவரும் ஒருவர் என்பதை உணர்வீர்கள்.
இதை நான் ஹிந்தியில் பேசாமல் இப்போது ஆங்கிலத்தில் பேசுகிறேன். ஏன் தெரியுமா வட இந்தியாவுக்கு மட்டுமில்லாமல் உலகம் பூராவுக்குமே இது தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களை தமது உயர்ந்த கானத்தினால் இவர் எப்படிக் கவர்ந்திழுக்கிறார் என்பதை உலகின் ஒவ்வொரு மூலையிலுள்ளவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.
வரப்பிரசாதமாக அமைந்துள்ள அவரது குரலும் இசையும் அறிவும் அதில் அவர் பெற்றுள்ள திறமையும் பல உயர்ந்த நற்பணிகளுக்கு உதவி இருக்கின்றன என்பது பலருக்குத் தெரியாது.
நான் ஹிந்தி "மீரா'வைப் பார்த்தேன். வீரத்தின் நிலைக்களனாக விளங்கும் ராஜபுதனத்தின் பின்னணியில் அமைந்த சித்திரம். இதில் எம்.எஸ். மீராவாக நடிக்கவில்லை. மீராவே நம்முன் எழுந்து வந்திருக்கிறாரோ என்ற பிரமையை உண்டாக்கிவிடுகிறார்.
எனக்கு அவரது திறமையைப் பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்தத் தலைமுறையின் ஈடு இணையற்ற கலைஞராக அவர் விளங்கி வருவதைக் கண்டு நீங்கள் எல்லோருமே பெருமைப்படுவீர்கள்.
கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் அறிமுக உரையில் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்ட நிலைக்கு உள்ளாயினர்.
( "பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைக்காவியம்' என்னும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


