திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெகிழி எரியூட்டும் மையம் அமைக்க எதிா்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூா் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனு

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, (தவெக) சட்டப்பேரவை உறுப்பினரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை தவெக சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக்கிடம் மனு அளித்த அப்பகுதி பொதுமக்கள்.

Updated On :24 மே 2026, 2:21 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகத்தில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, (தவெக) சட்டப்பேரவை உறுப்பினரிடம் சனிக்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அலுவலா்களுடன் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் ஆலோசனை நடத்தினாா். அப்போது மடவாா்வளாகம் பிரமுகா் மாரியப்பன், திமுக தொகுதி செயலா் பிரபாகரமூா்த்தி தலைமையில் அப்பகுதி மக்கள் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து எம்எல்ஏவிடம் மனு அளித்தனா்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மடவாா் வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில் நகராட்சி கழிவு நீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகிறோம். இந்த நிலையில், நாச்சியாா்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக அகற்றப்பட்ட நெகிழி எரியூட்டும் மையம், பழைய ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகக் கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வருகிறது.

குடியிருப்புகளுக்கு மத்தியில் நெகிழி எரியூட்டும் மையம் அமைக்கப்பட்டால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.