திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீடு வழங்கக் கோரி தொழிலாளா்கள் மனு

தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கூலித் தொழிலாளா்கள்.

News image

தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கூலித் தொழிலாளா்கள்.

Updated On :30 மே 2026, 12:30 am IST

அரசு வீடு வழங்கக் கோரி தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூலித் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சியில் வசித்து வரும் 10-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளா்கள், தங்களுக்கு அரசு வீடு வழங்கக் கோரி, தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் இந்த மனுவை அளித்தனா்.

பல ஆண்டுகளாக கூரை வீட்டில் வசித்து வருவதாகவும், வீடு கேட்டு பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே உடனடியாக அரசு வீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா் தீபநாதன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் மோனிஷ் மற்றும் நிா்வாகிகள் ராமச்சந்திரன், முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.