இக்கேள்வி முக்கியமானது. ஏனெனில், துவக்கம் என்று கருதப்பட்ட ஓரிடத்தில், அப்பண்பாடு மறைந்தொழிந்த காலத்தில் வேறு ஒரு இடத்தில் ஆதியும் அந்தமுமாகத் தொடங்குமா? அல்லது எச்சமாகத் தொடங்குமா? தொடர்ச்சியான வணிகத் தொடர்பும், பண்பாட்டுக் கலப்பும் நிகழ்ந்து வந்தபோது, மறைந்தொழிந்த ஒரு பண்பாடு முழு வீச்சுடன் ஏன் தொடரப்பட்டது? சமகாலத்தில் சமகாலத்தியப் பண்பாடும், தொழில்நுட்பமும்தான், சிந்தனையும் அதன் மேம்பட்ட நிலை கருதி, உற்பத்தி இடத்தில் இருந்து பிற பகுதிகளுக்குப் பரவுமே அன்றி, காலாவதியான ஒன்று பரவாது. மீறிப்பரவியது எனக் கொண்டாலும், பரவிய இடத்தில் நெடுங்காலம் அதாவது 2000 ஆண்டுகளுக்கும் குறையாத செல்வாக்குடன் அத்தனை வலுவுடன் இருக்கும் என்று கருதமுடியாது.