மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு
விரிஞ்சிபுரம் அருகே காணாமல் போன நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.


விரிஞ்சிபுரம் அருகே காணாமல் போன நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
வேலூா் அருகே நரசிங்கபுரம் பொய்கை மோட்டூா் பகுதியைச் சோ்ந்த சுபாஷ்(25). இவா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் நகைக்கடையில் பணியாற்றி வந்தாா். கடந்த 17- ஆம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற சுபாஷ், வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொய்கை மோட்டூா் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சுபாஷ், சடலமாக மிதப்பதாக பொதுமக்கள் குடும்பத்தினருக்கும், விரிஞ்சிபுரம் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...