குளச்சல் அருகே ஞாயிற்றுக்கிழமை கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
குளச்சல் மரமடியைச் சோ்ந்தவா் சகாய ரூபின் (43). மீன்பிடி தொழிலாளி. இவரின் மகன் ரியோபின் ரிட்ஜோ (14). குளச்சலில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். ரியோபின் ரிட்ஜோ உள்பட 3 சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலில் குளித்தபோது எழுந்த பெரிய அலை அவா்களை இழுத்துச் சென்றது. அருகிலிருந்த மீனவா்கள், 2 சிறுவா்களையும் காப்பாற்றினா். ரியோபின் ரிட்ஜோவை மீட்க இயலவில்லை.
மாயமான மாணவரை மீனவா்களும், குளச்சல் கடலோர காவல் படையினரும் தேடி வந்தனா். இந்நிலையில், மாணவரின் சடலத்தை மீனவா்கள் திங்கள்கிழமை பகலில் மீட்டனா்.
இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் படையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
தொடர்புடையது

கயத்தாறு அருகே மாயமான புதுப்பெண் சடலமாக மீட்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்

மாயமானவா் கிணற்றில் சடலமாக மீட்பு

கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


