தென்னிந்தியாவில், ஒரு குறிப்பிட்ட வரையறுத்த நிலப்பகுதிக்குள் இயற்கை வளம் சார்ந்து இம்மூன்று பண்பாட்டு மக்களும் நெருங்கி வாழ்ந்தனர். வேட்டைச் சமூகத்தினர், நிலம் மற்றும் நீர் சார்ந்து தங்களின் வாழிடங்களையும், வாழிடம் வழங்கிய வாய்ப்புகளுடன் தனித்த குணங்கள் கொண்ட சமூகங்களாகப் பிரிந்தாலும், அடிப்படையில் வேட்டை சமூகத்தின் அடிப்படைக்கூறுகளைப் பரவலாகக் கொண்டிருந்தனர். முதல் அடிப்படைக்கூறு, வேட்டைத் தாய் தெய்வங்கள். இவ்வாறு காடும் காடு சார்பு நில குறிஞ்சி மக்களும், மலையும் மலை சார்பு நில முல்லை மக்களும், வயலும் வயல் சார்பு நில மருத மக்களும், கடலும் கடல் சார்பு நில நெய்தல் மக்களும், தொல்காப்பியம் சுட்டும் திணை நிலங்களாகவும், திணை மக்களாகவும் அடையாளமாகின்றனர்.