கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நீதியைத் தேடி: லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

நீதியைத் தேடி மக்கள்
நீண்ட தூரம்   அலைந்திட  வேண்டுமா— உச்ச  
நீதி  மன்றகிளை  அருகினில் அமைந்திட வேண்டாமா  ?

நீதியைத் தேடி நீண்டநாட்கள்
நிம்மதி யற்றிருக்க வேண்டுமோ—அதை
அம்மட்டாக   ஆய்ந்து கூறும்  நீதி  மன்றங்கள் வேண்டாமா ?

வக்கீல் வாய்தாக் கட்டணமிங்கு
வானத்தை   தொட்டிட வேண்டுமா—வறியோர்  
வழக்கின் கட்டண மெல்லாம் அரசே  செலுத்திட வேண்டாமா?

மக்கள் தொகையும் கோடியாய்ப் பெருக   
அக்கால எண்ணிக்கை போன்று  – மன்றங்கள்
அந்நியர் காலத்தைப்போல் குறைவாய் இருந்திடலாகுமா?

சொத்துக் குவிப்பு வழக்கெல்லாம்  
சோர்ந்து நீர்த்துப்  போகவோ?  நடுநிலை நின்று  நீதி   
சொன்ன  நடுவரின்  தீர்ப்பை    நிலை நாட்டிட வேண்டாமா ?.

மாட்டுத் தீவன ஊழல் கள்ள
நோட்டை அச்சிட்ட வழக்கு கிரானைட் மணல் ஹவாலா டூஜிஎன

ஏட்டை நிரப்பிடும் வழக்குகள் தீர்வது எப்போதோ?
அரசியல் தலைவரின்  அங்குசமெனும்
கூரிய லோக்ஆயுக்தா  வேண்டாமா—அவர்   
குற்ற  ஊழலில்  விரைவில் சிறைப்பட   வேண்டாமா ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.