கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நீதியைத் தேடி: பாவலர் கோ. மலர்வண்ணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

நீதியைத் தேடிப் பயணம் செல்கையில்
    நேர்ந்திடும் அவலம் நினைக்கின் வருத்தமே!
போதிய பணபலம் வாய்க்கா தவர்க்குப்
    போராட் டந்தான் வாழ்நாள் எல்லாம்!
வாதிகள் செல்வம் மிக்கவ ராகவும்
    வறுமையில் பிரதி வாதிகள் இருப்பின்
நீதியார் பக்கம் நிற்கும்? என்பதை
    நினைந்து பார்மின்! வெல்வது பணமே!

அரசியல் வாதிகள் ஆயிரம் ஊழல்
    அடுக்கடுக் காகப் புரிந்திட் டாலும்
அரசியல் கட்சியோ அவர்க்குக் கவசமாய்
    அவரைப் பாது காத்திடச் செய்யுமே!
அரசியல் பகைவரை ஒறுக்க நினைக்கும்
    ஆளுங் கட்சியர் வழக்கு தொடுப்பதும்
சிறையினில் அடைத்துத் தீமை விளைப்பதும்
    தெரிய வைத்திடும்; நீதியெங் குள்ளதாம்?

செல்வாக் குள்ளவர் வழக்கில் சிக்கினால் 
    சிலமணிப் பொழுதில் முன்பிணை பெறுவதும்
செல்வாக் கற்றவர் முன்பிணை பெற்றிடத்
    திரிந்து துயரம் அடைந்து சோர்வதும்
எல்லா நாள்களும் நடப்பது தானே?!
    எங்கே நீதி? என்பது புரியுமே!
பொல்லா தவர்கள் சிலரோ, நீதியின்
    போக்கை மாற்றி வளைக்க நினைப்பரே!
   
நீதி மன்றம் ஒன்று வழங்கிய
    நிகரில் லாத தீர்ப்பினை வேறொரு
நீதி மன்றம் நிறுத்தி வைத்து
    நேரெதிர் தீர்ப்பு வழங்குதல் காண்கிறோம்!
நீதி எங்கே இருக்கிற தென்பதை
    நீங்களும் நானும் அறியவா கூடும்?
நீதி தேவதை கண்களை மறைத்தால்
    நீதி இருப்பிடம் தெரியுமோ அதற்கே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.