கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நீதியைத் தேடி : ஆ.மகராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

தங்களின் பிரச்சினைகளுக்குத் 
தீர்வு தருவார்கள் என்று நம்பித்
தேர்ந்தெடுத்தவர்களுக்குத்
தீராத பிரச்சினையாகி நிற்கிறார்கள் 
மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் ..

கோடிகளைக் குவிப்பதிலேயே
குறியாய் இயங்கும் இவர்களுக்கு,
பஞ்சம் பட்டினியால் தினம்
கொத்துக் கொத்தாய்
செத்து மடியும் அப்பாவி
விவசாயிகளைப் பற்றிய, 
கவலையும் இல்லை; 
அவர்களின்மேல்
கருணைகூட இல்லை.

இத்தனை வருடங்களில்
அவர்களின் பொருளாதாரத்தையோ
அவர்களுக்கான நீராதாரத்தையோ
மேம்படுத்த, உருப்படியாய்
திட்டங்களேதும் தீட்டவில்லை..
அதற்காய் அக்கறை கூட காட்டவில்லை..

விவசாயிகளிடமிருந்த விளைநிலங்களைப் பிடுங்கி 
வீட்டுமனகளாக்கி விட்டார்கள்.
நகரங்களின் விளிம்பிலிருந்த
நீர் நிலைகளையெல்லாம்  தூர்த்து 
பேருந்து நிலையங்களாக்கி விட்டார்கள்

இயற்கையிடமிருந்த
வளங்களனைத்தும் கொள்ளையடித்து,
வற்றாத ஜீவநதிகள் பாய்ந்த 
செழுமைப் பிரதேசங்களைக் கூட
வறண்ட பாலை நிலங்களாக்கி விட்டார்கள்..

நல்லாட்சி நடந்தால் மாதம் 
மும்மாரிப் பொழியுமாம்.
இவர்களால்தானோ இன்று,
வருடம் மும்மாரிப் பொழிவதற்கே
வானம் தயங்குகிறது..?

இவர்களின் தேர்தல் நேரத்துத்
தேன் தடவிய வாக்குறுதிகளிலும்
விநியோகிக்கப்பட்ட ஐநூறு ஆயிரங்களிலும்,

மதி மயங்கிய குடிமகன்கள் 
எழுதிய ஜனநாயகத் தீர்ப்புகள், 
அவர்களுக்கே இன்று எமனாகி நிற்கிறது ..!

பிரச்சினைகளுக்குத்
தீர்வு தர வேண்டியவர்களே
அவர்களின் தீராத 
பிரச்சினையாகி் நிற்கிறார்கள்..!

தீங்காகிப்போன தீர்ப்பை எழுதிவிட்டு,
நீதியைத் தேடிக்கொடிருக்கிரர்கள்,

பாவம், இன்றைய விவசாயிகளும், 
இந்திய ஜனநாயகமும்தான்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.