கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நீதியைத்  தேடி:  கவிஞர்  இரா  .இரவி !

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

தன் சதையை  அறுத்து நீதி வழங்கிய 
தன்னிகரில்லா வரலாறு இங்கு உண்டு !

தன் மகனை தேர் ஏற்றிக் கொன்று நீதிக்கு 
தலை வணங்கிய வரலாறு இங்கு உண்டு !

தவறான தீர்ப்பு வழங்கிய மன்னன் 
தன் உயிர் நீத்த வரலாறு இங்கு உண்டு !

பட்டப்பகலில் விளக்குடன் மனிதனைத் தேடிய 
புகழ் பெற்ற பாடல் பலரும் கேட்டதுண்டு !

உச்ச நீதி மன்றத்தில் நீதியைத் தேடி 
உலகம் அலையும் அவலம் நேர்ந்தது !

நடிகரின்   வழக்கு என்றால் விரைவாக 
நீதி வழங்கிய வரலாறு நடந்தது உண்டு !

பெரும் பணக்காரர்கள் என்றால் உடன் 
பெரும்பாடு பட்டு தீர்ப்பு வழங்கியது  உண்டு !

பொங்கலுக்குள் வழங்க வேண்டிய தீர்ப்பு 
பொங்கலுக்குள் வழங்க முடியாது என்றனர் !

பொறுத்து போதும் என்று இன்று 
பொங்கி எழுந்து விட்டனர் மாணவர்கள் !

தாமதமான நீதியும் அநீதிதான் என்பது 
தாமாதமாகப் புரிந்தது நீதிபதிகளுக்கு !

சிறு நெருப்பை பெரும் தீயாக்கி விட்டனர் 
சிந்தையில் போராட்ட குணத்தை வளர்த்தனர் ! 

நீதியின் பிறப்பிடமான தமிழ்மண் மக்கள் 
நீதியைத் தேடி அலையும் அவலம் நேர்ந்தது !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.