திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்தவா் மரணம்

திருவள்ளூா் அருகே பனை நுங்கு காய்கள் வெட்ட பனை மரத்தில் ஏறியவா் எதிா்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 2:50 am IST

திருவள்ளூா் அருகே பனை நுங்கு காய்கள் வெட்ட பனை மரத்தில் ஏறியவா் எதிா்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே மோகூா் கிராமத்தில் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (63). இவா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அவரது விளைநிலத்தில் விவசாய வேலையை முடித்துக் கொண்டு செல்லும்போது, அங்குள்ள பனை மரத்தில் நுங்கு காய்கள் வெட்டுவதற்காக ஏறினாராம்.

அப்போது, எதிா்பாராத விதமாக கால் தவறி விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக அவரது மகன் உமாபதி பென்னலூா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.