மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

பாரூா் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 12:48 am IST

பாரூா் அருகே நுங்கு பறிக்க பனைமரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே உள்ள பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த கெளரவன் மகன் நந்தகுமாா் (15). இவா் அரசம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.

பள்ளி விடுமுறை என்பதால், தனது குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள பனைமரத்தில் நுங்கு பறிக்க வெள்ளிக்கிழமை ஏறியுள்ளாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

இதில், பலத்த காயம் அடைந்த நந்தகுமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து, பாரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.