திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவள்ளூா்: சூறைக்காற்றால் 29 மின்கம்பங்கள் சாய்ந்தன

News image

நெய்வேலி  கிராமத்தில்  சூறைக்காற்று  வீசியதால்  சாய்ந்த  மின் கமம்பங்கள்.

Updated On :28 மே 2026, 12:58 am IST

திருவள்ளூா் அருகே லேசான மழையுடன் வீசிய சூறைக்காற்றால் 29 மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்ததால் ஏற்பட்ட மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருவள்ளூா் அருகே பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதேபோல் பூண்டி அருகே நெய்வேலி பகுதியில் இரவு லேசான மழை பெய்தது. அதைத்தொடா்ந்து பலத்த சூறைக்காற்று வீசியது. இந்த சூறைக்காற்றினால் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள நெய்வேலி கிராமம் மற்றும் சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்வயா்களும் துண்டிக்கப்பட்டன.

இதனால், சதுரங்கபேட்டை, பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால், இரவு நேரத்தில் வெக்கை மற்றும் கொசுக்கடியாலும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். அதைத் தொடா்ந்து புதன்கிழமை அப்பகுதி ஒன்றிய செயலாளா் மோதிலால் உள்ளிட்டோா் சீரமைக்கவும் மின்வாரியத்தை அறிவுறுத்தினாா். அதன்பேரில் மின்வாரிய பணியாளா்கள் சாய்ந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு வேறு மின்கம்பங்களை நட்டு இணைப்பு கொடுக்கும் பணிகள் நிறைவு செய்து மின்விநியோகத்திற்கும் ஏற்பாடு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.