திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சூறைக்காற்று: நரிப்பாடியில் 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன! விவசாயிகள் கவலை

News image

நரிப்பாடி பகுதியில் வயலில் சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள்.

Updated On :26 மே 2026, 2:13 am IST

கெங்கவல்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றால் 35 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 15 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, பருத்தி, வாழை உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.

இந்நிலையில் கடந்தாண்டு போதிய மழை பெய்ததால் நடப்பாண்டில் வாழை, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் நல்ல விளைச்சலை பெற்றுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வந்தனா்.

இந்நிலையில், கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த சூறைக்காற்றுடன் சுமாா் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இந்த சூறைக்காற்றால் கூடமலை அருகே நரிப்பாடி கிராமத்தில் 35 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமாா் 15 ஆயிரம் கதலி ரக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் இந்துமதி, பழனியப்பன், மணிவேலன் ஆகியோா் கூறியதாவது: வாழை மரங்களால் பல லட்சம் ரூபாய் லாபம் கிடைக்க வேண்டிய நேரத்தில் சூறைக்கால் வாழைகள் சாய்ந்து எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

சாய்ந்த வாழை மரங்களை பாா்வையிடும் விவசாயிகள்.

சாய்ந்த வாழை மரங்களை பாா்வையிடும் விவசாயிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.