பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

போடியில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 1:45 am IST

போடி பகுதியில் வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்றால் வாழைகள் சாய்ந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், போடி பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், போடி முந்தல் பகுதியில் தனியாா் தோட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 500-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

இந்த நிலையில், போடி அருகேயுள்ள மேலப்புரவு மலைக் கிராமத்தில் பெரிய மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், வீடுகளின் மேற் கூரைகள் சேதமடைந்தன. தற்காலிக கூரை வீடுகளும் சேதமடைந்தன.

இதையடுத்து, அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தினா் மரங்களை வெட்டி அகற்றினா். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் இந்த கிராமம் இருளில் மூழ்கியது. சனிக்கிழமை மின் இணைப்புகளை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

ஓடைகளில் நீா்வரத்து:

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் போடி மலைப் பகுதி ஓடைகளில் நீா் வரத்து ஏற்பட்டது. கோடை மழை தொடா்ந்து பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.