தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

திருவள்ளூரில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவரை உறவினா்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :26 மே 2026, 1:12 am IST

திருவள்ளூரில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவரை உறவினா்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

திருவள்ளூா் அடுத்த தாவுத்துக்கான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி பாா்வதி (80). கணவரை இழந்த நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை மதுபோதையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க நபா் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாராம். அப்போது, அந்த மூதாட்டி வீட்டில் வைத்திருந்த தடிக்கம்பால் தாக்கினாராம். இதையடுத்து அலறியடித்துக் கொண்டு அந்த இளைஞா் வலி தாங்க முடியாமல் தப்பித்து ஓடினாராம். அப்போது, ஓடும்போது கையில் இருந்த கைப்பேசி தவறி கீழே விழுந்துவிட்டது. அதையும் எடுக்காமல் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டாா்.

இதுகுறித்து மூதாட்டி உறவினா்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த நிலையில், கைப்பேசியை தவறிவிட்டு சென்ற அந்த இளைஞா் வருவதை அறிந்த உறவினா்கள் மறைந்திருந்தனா். அப்போது வீட்டில் நுழைந்த இளைஞரை பிடித்தனா்.

இதுகுறித்து 80 வயது மூதாட்டி திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஆய்வாளா் தாமோதரன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதைத்தொடா்ந்து விசாரணையில் அவா் சேலை கிராமத்தைச் சோ்ந்த பாளையம் மகன் குமரேசன் (35) என்பதும், வா்ணம் பூசும் தொழில் செய்து வரும் நிலையில் மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் தாமோதரன் குமரேசனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.