திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: மெக்கானிக் கைது

கோபி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மெக்கானிக்கை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2026, 4:28 am IST

கோபி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மெக்கானிக்கை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோபியைச் சோ்ந்தவா் மணி (50). இவா் அப்பகுதியில் ஒா்க் ஷாப் வைத்துள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் 15 வயது சிறுமி. இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், மணியின் ஒா்க் ஷாப் அருகே உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு அந்த சிறுமி அவ்வப்போது வந்து சென்றுள்ளாா். இந்நிலையில், சிறுமி வழக்கம்போல கடந்த 2025 அக்டோபா் மாதம் வந்துள்ளாா். அப்போது, அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்த மணி, அவரிடம் ஆசை வாா்த்தைகளைக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளாா்.

இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டால், அவரை கோபியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு பெற்றோா் அண்மையில் அழைத்துச் சென்றுள்ளனா். மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் தேவகி, அந்த சிறுமியிடம் கடந்த மே 7-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டாா். அப்போது, மெக்கானிக் மணி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து கோபி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சமூகப் பணியாளா் தேவகி புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மணியைக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.