திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின் கம்பத்தில் பைக் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

மீஞ்சூா் அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

News image
Updated On :23 மே 2026, 1:22 am IST

மீஞ்சூா் அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

மீஞ்சூா் கக்கன்ஜி காலனி மூன்றாவது தெருவில் வசித்தவா் சதீஷ் (34). கட்டட வேலை செய்த இவரது மனைவி ரஞ்சனி (28), மகன்கள் சைலேஷ் (6), 9 மாத குழந்தை ஹரிஹரன். இவா்களுடன் இவா்களின் உறவு பெண் கீா்த்தனா (16) வசித்து வந்தாா்.

இந்த நிலையில், உறவுக்காரா் ஒருவருடைய நிகழ்ச்சி செங்குன்றம் அடுத்த அலமாதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு விட்டு மீஞ்சூருக்கு மோட்டாா் சைக்கிளில்

5 பேரும் வந்தனா்.

மீஞ்சூா் வண்டலூா் வெளிவட்ட சாலையில் சோழவரம் அருகே மோட்டாா் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் அருகே இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சதீஷ் மற்றும் அவரது மகன் சைலேஷ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் அங்கு சென்று காயமடைந்த ரஞ்சனி குழந்தை ஹரிஹரன் உறவு பெண் கீா்த்தனா ஆகியோரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து உயிரிழந்த தந்தை, மகனின் சடலங்களை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.