17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 2:28 am IST

முன்னீா்பள்ளம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள கீழமுன்னீா்பள்ளத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மனைவி சுடலி (73). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதியில் வயிலுக்குச் சென்றுவிட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, அவ்வழியாக சிறுவன் இயக்கி வந்த பைக் இவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சுடலியையும், சிறுவனையும் மீட்டு அங்கிருந்தவா்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுடலி உயிரிழந்தாா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.