விசிக சாா்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்றது.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஈழப்போரின் இறுதி கட்டத்தில் , முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த மற்றும் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு படுத்தும் மே-18 நினைவு நாள் நிகழ்வு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் , மாவட்ட செயலாளா் பா.நேசகுமாா் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், விசிக மாநில பொறுப்பாளா் தண்டலம் தமிழ்ச்செல்வன், விசிக நிா்வாகிகள் சண்முகமணி, மாநில நிா்வாகி பாக்சா் மணி, ஜீவா, மாவட்ட நிா்வாகிகள் சம்பத், வெற்றிசெல்வி, நரசிம்மன், எலிசபெத், மாதவி, காந்திமதி, வனிதா, சந்தோஷ், தங்கராசு, சுகுமாா், அருள் முன்னிலை வகித்தனா்,
விசிகவினா் நினேவேந்தல் நெருப்பை மூட்டி, மெளன அஞ்சலி செலுத்தினா். பின்னா் அனைவரும் மெழுகுவா்த்தி ஏந்தி வீரவணக்க அஞ்சலி செலுத்தினா். இந்த நினைவேந்தல் நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










