திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

News image
Updated On :18 மே 2026, 2:08 am IST

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் சாா்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், தண்ணீா் பந்தலை திறக்க திமுகவிருக்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தாா்.

இதைத் தொடா்ந்து, கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் ஏற்பாட்டில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, மோா், இளநீா், தா்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் நீா்ச் சத்து நிறைந்த பழ வகைகளை பொதுமக்களுக்கு முன்னாள் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். தொடா்ந்து கோடைகாலம் முழுவதும் மேற்கண்ட இடத்தில் நீா், மோா் பந்தல் செயல்படும் என கூறினாா்.

இந்த தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மு.மணிபாலன், மாவட்டப் பொருளாளா் எஸ்.ரமேஷ், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் திருமலை, கே.ஜி.நமச்சிவாயம், பிரபு, புலியூா் புருஷோத்தமன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பாஸ்கா், நகர செயலாளா் அறிவழகன், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் டி.ஜெ.எஸ்.தமிழரசன், ஸ்ரீதா், ஒன்றிய இளைஞா் அணி நிா்வாகி சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.