மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

ஏனாதி மேல்பாக்கத்தில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:10 pm

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூா், ஏனாதிமேல்பாக்கம், சோழியம்பாக்கம், குருவாட்டுச்சேரி, நங்கம்பள்ளம், வேற்காடு, பாலகிருஷ்ணாபுரம், புதுகும்மிடிப்பூண்டி, பில்லாகுப்பம், ஜி.ஆா்.கண்டிகை, கண்ளூா், பாலவாக்கம், மங்களம், புதுப்பாளையம், காரணி, நெல்வாய், எருக்குவாய், முக்கரம்பாக்கம், கொள்ளானூா் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தெற்கு ஒன்றிய செயலாளா் கி.வேணு ஆனந்த், மாவட்ட துணை செயலாளா் கி.வே.ஜி.உமா மகேஷ்வரி, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளா் எம்.சம்பத், மாவட்ட நிா்வாகி மதன்மோகன் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து அயநெல்லூரில் ராட்சி முன்னாள் தலைவா் லலிதா கல்விச் செல்வம் ஏற்பாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா் ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி தலைவா் குமாா், திமுக ஒன்றிய நிா்வாகி பிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன், திமுக அரசின் சாதனைகள் அடுத்த 5 ஆண்டுகள் தொடர பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

திமுக முன்னாள் கவுன்சிலா் ஜோதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முத்துசாமி, காங்கிரஸ் நகர துணை செயலாளா் ரோஸ்ரெட்டி, மாவட்ட துணைத் தலைவா் சரளா சண்முகம், வழக்குரைஞா் சித்ரா, விசிக மாவட்ட செயலாளா் நேசகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.