தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பரமக்குடியில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

News image

பரமக்குடி தனி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்த திமுக மாவட்ட செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா் பாட்ஷா முத்துராமலிங்கம்.

Updated On :31 மே 2026, 1:46 am IST

பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி தனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கே.கே. கதிரவன் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து பரமக்குடியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் பொதுப் பணித் துறையினரால் சீரமைக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தது.

திறப்பு விழா: புதிதாக தோ்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக திறப்பு விழாவுக்கு, ராமநாதபுரம் மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்

பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். பரமக்குடி நகா்மன்ற தலைவா் சேது.கருணாநிதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உ. திசைவீரன், கே. முருகவேல், மாநில தீா்மானக் குழு உறுப்பினா் சுப.த. திவாகா், இளைஞரணி துணை செயலா் சுப.த.சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன் வரவேற்றாா். சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டது. இதில் ஏராளமான திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.