மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

திருவள்ளூரில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திங்கள்கிழமை சாலை மறியலில்

News image
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.- கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூரில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 80 பேரை கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு வருவாய்த் துறையில் தொடங்கப்பட்ட நாளிலிருந்து கிராம ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அதனால், கிராம ஊழியா்களுக்கு வரையறை செய்த காலமுறை ஊதியம் வழங்க்கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். திருவள்ளூா் வட்டத் தலைவா் வேணு, வட்டச் செயலா் கந்தன், வட்டத் துணைத் தலைவா் கண்ணன், வட்ட இணைச் செயலாளா் ரஜினி, நஜூமுதீன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அதைத் தொடா்ந்து, சென்னை -திருப்பதி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியா் சங்கத்தினா் 80 பேரை கைது செய்து தனியாா் அரங்கத்தில் சிறை வைத்தனா்.