திருவள்ளூா்: திருவள்ளூரில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 80 பேரை கைது செய்யப்பட்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு வருவாய்த் துறையில் தொடங்கப்பட்ட நாளிலிருந்து கிராம ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அதனால், கிராம ஊழியா்களுக்கு வரையறை செய்த காலமுறை ஊதியம் வழங்க்கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். திருவள்ளூா் வட்டத் தலைவா் வேணு, வட்டச் செயலா் கந்தன், வட்டத் துணைத் தலைவா் கண்ணன், வட்ட இணைச் செயலாளா் ரஜினி, நஜூமுதீன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அதைத் தொடா்ந்து, சென்னை -திருப்பதி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியா் சங்கத்தினா் 80 பேரை கைது செய்து தனியாா் அரங்கத்தில் சிறை வைத்தனா்.
தொடர்புடையது

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

நாகை, சீா்காழியில் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 114 போ் கைது

கிராம வருவாய் ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல்

வரையறுக்கப்பட்ட ஊதியம் கோரி கிராம ஊழியா்கள் சாலை மறியல் 54 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


