லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:47 pm

கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 50 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் மகேஸ்வரி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கடலூா் மாவட்டத் தலைவா் வெங்கடாஜலபதி, கடலூா் வட்டச் செயலா் ராமா், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கம் மாவட்டச் செயலா் என்.காசிநாதன், வட்டத் தலைவா் சிவக்குமாா், ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டத் தலைவா் டி.புருஷோத்தமன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். பின்னா், மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசாா் கைது செய்தனா்.