2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வரையறுக்கப்பட்ட ஊதியம் கோரி கிராம ஊழியா்கள் சாலை மறியல் 54 போ் கைது

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கரூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 54

News image
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 8:40 pm

Syndication

கரூா்: வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கரூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 54 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் அரசகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கெளரவத்தலைவா் சுப்ரமணியன் வரவேற்றாா்.

வருவாய்த்துறை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் எம்.எஸ்.அன்பழகன் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள் திடீரென்று ஆட்சியா் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தாந்தோணிமலை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை கைது செய்தனா். பின்னா் மாலையில் விடுவித்தனா்.