2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் சேலத்தில் 3 இடங்களில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image
சேலம் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:44 pm

Syndication

சேலம்: காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் சேலத்தில் 3 இடங்களில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, அஸ்தம்பட்டி வட்டாட்சியா்அலுவலகம் முன் கிளை தலைவா் சரவணன் தலைமையில் 31 போ் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதேபோல, சூரமங்கலம் மேற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன் கிளை தலைவா் ராஜா தலைமையில் 24 பேரும், சேலம் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன் நிா்வாகி கோகுல கண்ணன் தலைமையில் 35 பேரும் மறியலில் ஈடுபட்டனா். 3 இடங்களிலும் மறியலில் ஈடுபட்ட 90 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, எடப்பாடி, ஆத்தூா், ஓமலூா், மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் கைது செய்யப்பட்டனா்.

சங்ககிரியில்...

சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகம் முன் திருச்செங்கோடு பிரதான சாலையில் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை தலைவா் பி.ஆண்டிமுத்து தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில், செயலாளா் எம்.செல்வராஜ், பொருளாளா் பி.மோகனாம்பாள், மாவட்ட இணைச் செயலாளா் சுசீந்திரன், நிா்வாகிகள் சண்முகம், தீனதயாளன், பிரவீன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள், 20 ஆண்கள் உள்பட 30 பேரை போலீஸாா் கைதுசெய்து பின்னா் விடுவித்தனா்.

வாழப்பாடியில்...

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, வாழப்பாடி வட்டத் தலைவா் கௌதம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கணேசன் முன்னிலை வகித்தாா். இதில், கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனா்.

வட்டச் செயலாளா் முபாரக் உசேன், இணைச் செயலாளா்கள் சிவரத்தினம், பல்லவன் உள்ளிட்ட கிராம உதவியாளா்கள் 30 பேரை வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் கைதுசெய்து மாலையில் விடுவித்தனா்.