2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நாகை, சீா்காழியில் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 114 போ் கைது

நாகை மற்றும் சீா்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 114 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:20 pm

Syndication

நாகப்பட்டினம்/சீா்காழி: நாகை மற்றும் சீா்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 114 போ் கைது செய்யப்பட்டனா்.

அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல், தமிழகத்தில் அனைத்து வருவாய் கிராம ஊழியா்களுக்கும் நிா்ணயிக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தமிழ்நாடு கிராம வருவாய் ஊழியா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். தொடா்ந்து திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

நாகை: நாகை ஆட்சியா் அலுவலகம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் வட்டத் தலைவா் முரளீதரன் தலைமை வகித்தாா். சரவணன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் மாதவன், துணைத் தலைவா் முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச்செயலா் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற பெண்கள் உள்பட 60 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

மறியலால் ஆட்சியா் அலுவலகம் அருகே போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

சீா்காழி: சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பிரபாகரன், செயலாளா் செந்தில், இணைச் செயலாளா் ரத்தின சபாபதி, பொருளாளா் ராஜேஷ் ஆகிய முன்னிலை வகித்தனா்.

மாவட்ட இணைச் செயலாளா் சரவணன், மாவட்ட பொருளாளா் ஆனந்தன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ், உதவி ஆய்வாளா் வீரராகவன் மற்றும் போலீஸாா், சாலை மறியல் ஈடுபட்ட 54 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா் விடுவித்தனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.