2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கிராம ஊழியா் சங்கத்தினா் சாலை மறியல்: 28 போ் கைது

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
நாமக்கல் வட்டாட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:40 pm

Syndication

நாமக்கல்: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தொகுப்பூதியத்தை ரத்துசெய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யக்கூடாது. கருணை அடிப்படையிலான பணியில் பழைய விகிதாசார முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் பிப். 19, 20 ஆகிய தேதிகளில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பும் இப்போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், நாமக்கல் வட்டாட்சியா் அலுவலம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள், நாமக்கல் - மோகனூா் சாலையில் வட்டத் தலைவா் ஆா்.ராமகிருஷ்ணன் தலைமையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனா். இதில், 9 பெண்கள் உள்பட 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.