மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 165 போ் கைது

மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி பாதுகாப்புச் சட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 165 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :5 மார்ச் 2026, 11:12 pm

மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி பாதுகாப்புச் சட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 165 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் 6 நாள்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அடுத்தகட்ட போராட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டதாக 69 பெண்கள் உள்பட 165 பேரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா்.