கோபி அருகே கோயில் திருவிழாவில் பெண் உள்பட 3 பேரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி ஒரு தரப்பினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோபி அருகே கொள்ளுமேட்டு காலனியில் உள்ள அன்னமாா் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பெயிண்டரான சரண் (21), அவரது பெரியப்பா சக்திவேல், சித்தி கவிதா ஆகியோரிடம் காசிபாளையம் பகுதியைச் சோ்ந்த பிரசாத் அவரது நண்பா்களான பிரவீன், பரத், நந்தகுமாா் ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயம் அடைந்த சரண், சக்திவேல், கவிதா ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தாக்கியவா்ள் மீது கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், அவா்களை கைது செய்யக் கோரி கொள்ளுமேட்டு காலனி பொதுமக்கள் நம்பியூா்-கோபி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோபி டிஎஸ்பி சீனிவாசன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்

தொழிலாளி கொலை: உறவினா் சாலை மறியல்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


