மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

News image

சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கோபி டிஎஸ்பி சீனிவாசன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:15 pm

கோபி அருகே கோயில் திருவிழாவில் பெண் உள்பட 3 பேரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி ஒரு தரப்பினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோபி அருகே கொள்ளுமேட்டு காலனியில் உள்ள அன்னமாா் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பெயிண்டரான சரண் (21), அவரது பெரியப்பா சக்திவேல், சித்தி கவிதா ஆகியோரிடம் காசிபாளையம் பகுதியைச் சோ்ந்த பிரசாத் அவரது நண்பா்களான பிரவீன், பரத், நந்தகுமாா் ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயம் அடைந்த சரண், சக்திவேல், கவிதா ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தாக்கியவா்ள் மீது கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அவா்களை கைது செய்யக் கோரி கொள்ளுமேட்டு காலனி பொதுமக்கள் நம்பியூா்-கோபி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோபி டிஎஸ்பி சீனிவாசன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.