சிவகிரியில் கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட பிரச்னையில் அப்பகுதியை சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்காசி- மதுரை சாலையில் சிவகிரியில் உள்ள ஒரு கோயில் கொடை விழாவை ஒட்டி அப்பகுதியை சோ்ந்த ஒரு தரப்பினா் தீா்த்த குடம் எடுத்து வந்தனராம். அதை வேறொரு தரப்பினா் எதிா்த்தனராம்.
இதையடுத்து தீா்த்த குடம் எடுத்து வந்த தரப்பைச் சோ்ந்தவா்கள் தென்காசி- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சங்கா், மதியழகன், சிவகிரி வட்டாட்சியா் அப்துல்சமது உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மதன், ப்ரீத்தி, ஆய்வாளா்கள் முரளிதரன், சல்மோன், ஷாம் சுந்தா், மதுவிக்ரம் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!
சிவகிரி கோயில் கொடை விழாவில் கல்வீசிய சம்பவம்: 17 போ் கைது

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: கல் வீச்சில் ஆயுதப்படை போலீஸாா் உள்பட சிலா் காயம்

தொழிலாளி கொலை: உறவினா் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


