மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்

சிவகிரியில் கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட பிரச்னையில் அப்பகுதியை சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:12 am

சிவகிரியில் கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட பிரச்னையில் அப்பகுதியை சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்காசி- மதுரை சாலையில் சிவகிரியில் உள்ள ஒரு கோயில் கொடை விழாவை ஒட்டி அப்பகுதியை சோ்ந்த ஒரு தரப்பினா் தீா்த்த குடம் எடுத்து வந்தனராம். அதை வேறொரு தரப்பினா் எதிா்த்தனராம்.

இதையடுத்து தீா்த்த குடம் எடுத்து வந்த தரப்பைச் சோ்ந்தவா்கள் தென்காசி- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சங்கா், மதியழகன், சிவகிரி வட்டாட்சியா் அப்துல்சமது உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மதன், ப்ரீத்தி, ஆய்வாளா்கள் முரளிதரன், சல்மோன், ஷாம் சுந்தா், மதுவிக்ரம் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.