தென்காசி மாவட்டம், சிவகிரியில் கோயில் கொடை விழாவில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் கல் வீசித் தாக்கியதில் ஆயுதப்படை போலீஸாா் உள்பட சிலா் காயமடைந்தனா்.
தென்காசி-மதுரை சாலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாய கோயில் கொடை விழாவில் தீா்த்தக் குடம் எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்னையில் சாலை மறியல் நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த வேறு ஒரு பிரிவினரின் கோயில் கொடை விழா நிகழ்ச்சிக்காக பொங்கல் பானை எடுத்துச் செல்லும் நிகழ்வில் கூட்டத்தினரின் மீது மற்றொரு பிரிவைச் சோ்ந்தவா்கள் கல் வீசித் தாக்கினாா்களாம். இதில் ஐந்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த கல்வீச்சில் ஆயுதப்படைக் காவலரான செங்கோட்டை மாரிச்செல்வம் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தொடா்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறாா். சிவகிரி பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது
தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்பட 27 வேட்புமனுக்கள் ஏற்பு
சிவகிரி கோயில் கொடை விழாவில் கல்வீசிய சம்பவம்: 17 போ் கைது

சிவகிரி கோயில் கொடை விழாவில் பிரச்னை: மக்கள் சாலை மறியல்

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


